கையளவு சாம்பல்

ganga_aarti

எந்தப் பறவை பறந்தாலும்
ஏற்கிறது வானம்,
எந்த சுரத்திலும் பிறக்கிறது
ஏழிசை கானம், ,
எந்த கைகள் யாசித்தாலும்
கொட்டுகிறது இயற்கை,
எந்த விழிகள் தொழுதாலும்
அன்பைத் தருகிறது மதங்கள்,
எந்த விரல் பட்டாலும்
பூக்கள் சிரிக்கின்றன,
எவர் நீர் ஊற்றினாலும்
உள்வாங்குகிறது வேர்,
எந்த கண்களுக்கும்
ஏழு நிறத்தை காட்டுகிறது
வானவில்,
எவர் கிழித்தாலும்
ஏழு நாட்களாய் உள்ளது
நாட்காட்டி,
எவர் நின்றாலும்
நிழல் அளிக்கிறது மரம்,
எவர் வீழ்ந்தாலும்
தாங்குகிறது பூமி,

இதற்கிடையில் நானென்ன நீயென்ன?
முடிவில் எல்லாம் ஒரு கையளவுச்சாம்பல்.

— புதுவை காயத்திரி

1 Comment

Filed under Life, past, people

One response to “கையளவு சாம்பல்

  1. Ambikapathy.M

    Good!

Leave a comment