Tag Archives: தீபத்திருநாள்

நினைவுகளாய் வெடிக்கும் தீபத்திருநாள்

vilaku1

எங்களின் தீபாவளி
ஒரு மாதத்திற்கு
முன்பே தொடங்கிவிடும்

காலண்டரின் தேதி
கிழிகையில்
மனதில் நாட்களின்
எண்ணிக்கை குறையும்

வகுப்பிலும் தெருவிலும்
வாங்கும் பட்டாசும்
உடுத்தபோகும் ஆடையின்
பேச்சாயிருக்கும்

தூப்பக்கியே
எங்களின்
தீபாவளி
தொடங்கிவைக்கும்

அப்பாவுடனும்
அம்மாவுடனும்
தொடங்கும்
எங்கள் பட்டண பிரவேசம்

அம்மன் சந்நிதியுளும்
திலகராஜில்  தொடங்கும்
தேடல் வேட்டை
வாசன் ஜவுளியில்
வந்து முடியும்

எனக்கும் பேண்ட் வேணும்
என கேட்டுக்கும்
தம்பியின் அழுகை
கரும்பு சாறில் சமாதான படுத்தப்படும்

அந்த புதிய வாசனை
முகர்ந்து பார்க்க
திட்டுகளை பொருத்து கொண்டு
எடுத்து எடுத்து பார்போம்
அலமாரியில் இருந்து

முறுக்கு பிழிகிறேன்
என்று எண்ணெய்
சுட்டதும் வலிக்கவில்லை

சாமிக்கு வைக்காமல்
தரப்படுவதிலை தின்பண்டங்கள்
ஆயினும்
வெண்ணை திருடிய கண்ணாய்
முறுக்கு திருடினோம்

என்றும் சோம்பலாய்
எழும் நாங்கள்
அன்று மட்டும்
சூரியனக்கு முன்பாய்
கண் விழிப்போம்

எண்ணெய் குளியலுமாய்
வேகும் கறி மணமாய்
தீபாவளி தொடங்கும்

சித்தப்பன் கைபிடித்து
சரஸ்வதி
லட்சுமி
பொருளாதார தடை விதிக்காத
அணுகுண்டுகளை
வெடித்து மகிழ்ந்தோம்

தெருவெங்கும்
குப்பையாய்
அடுத்தநாள்
வெடிக்காத வெடி தேடி
வீதியில் திரிந்தோம்

அத்தையும் மாமனும்
சித்தியும் சித்தப்பாவும்
தாத்தாவும் பாட்டியும்
என
சந்தோசமாய் கொண்டாடிய
தீபாவளி அது
அந்த சந்தோசத்தின்
அடையாளமாய் இன்றும்
கையில் உண்டு
வெடி வெடித்த தழும்பு

அன்று
சொந்தங்கள் சூழ
உண்டும்
வெடித்தும்
அந்த தீபாவளி
நினைவாய் மட்டுமே

இன்று
வேலைகாரணமாக
வெளிநாட்டில் (வெளிஊரில்)
தனித்து இருக்கையில்
இனிக்கவில்லை
இந்த தீபாவளி !

– பாண்டிய இளவல்

Leave a comment

Filed under Deepavali, Diwali, Life

பட பட பட்டாசாய் – வெடிக்கும் தீபாவளி

diwali-131v
தீபங்களின் ஒளியும் .,
உங்கள் அனைவரின் புன்னகையின் ஒலியும்
ஒன்றாய் இணைந்து ஒரு புது சந்தோச ஒளி
உங்கள் இல்லங்களில் ஒளிக்கட்டும் .!

இது வரை உங்களின் இதழ்களை மவுனம் மட்டுமே
அலங்கரித்திருந்தாலும்., இந்த இனிய திருநாளில்
வண்ண வண்ண மத்தாப்பூ வார்த்தைகள்
உங்கள் இதழ்களில் மலரட்டும் .!

உங்கள் மேனி தொடும் புது ஆடைகளின்
அழகில் மயங்கி சாலையோரா பூக்கள்கூட
வெட்கத்தில் முகம் மறைத்துக் கொள்ளட்டும் .!

தூரத்தில் இருந்து ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்
ஏழைக் குழந்தைகளை சத்தம் போட்டு அழைத்து
சத்தமில்லாமல் வண்ண வண்ண பட்டாசுகளையும்
தித்திக்கும் இனிப்புகளையும் அள்ளிக்கொடுத்து அவர்களின்
மகிழ்ச்சியின் முகவரியை அறிமுகப்படுதுங்கள். !

சுற்றி சுற்றி ஓய்ந்து போய் ஓரமாய் கிடக்கும்
சங்கு சக்கரங்களிடம் கால் வலிக்கிறதா ?
என்று கேட்டு ஆறுதல் கூறுங்கள் .!

முடிந்தால் பகலுக்கு விடுமுறை கொடுத்து .
கவிதை பேசும் நிலவுடன் கூடிய
இனிய இரவுகளை நீளச் செய்யுங்கள்.!

இந்த இனிய இரவினில் இன்னும்
உறங்கிக்கொண்டிருக்கும் உங்கள் வீட்டு
விலங்குகளை எழுப்பி அவற்றிற்கு
முகம் கழுவி புதுப்பொலிவு ஏற்றி சற்று சிரிக்கச் சொல்லி
இரவுக்கும் விடுமுறை கொடுங்கள் .!

சத்தம் போட்டு வெடிக்கப்போகும் பட்டாசுளை
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத
எறும்புகளிடம் சற்று குனிந்து ஓடிப்போய் ஒளிந்து கொள்ளுங்கள்
என்று அதன் காதுகளில் இரகசியமாய் ஓதுங்கள் .!

இயன்றால் கண்களில் தென்படும் அனைத்துப்
பறவைகளையும் மதியம் உங்கள் வீட்டு விருந்துக்கு கூப்பிடுங்கள் .!
எறும்புகளின் வீடுகளுக்கே சென்று இனிப்பு வழங்குங்கள்.

சத்தமாய் வீசும் காற்றை அதட்டி
சற்று அமைதியாய் இருக்க சொல்லுங்கள் .

ஊனமென்று கூறிய உதடுகள் உறைந்துபோகும்வரை
இயலாதவர்களுக்கு ஊன்றுக்கோலாய் இருங்கள். !

இப்படி இயன்ற அளவில் இன்று
ஒருநாள் புதுமை பரப்புங்கள்.

பார்க்கும் விழிகள் எதுவும் உங்களை
பார்க்காது கடந்து சென்றாள் ஒன்றாய் சேர்ந்து
சத்தமாக இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்று புன்னகையுடன் சொல்லுங்கள் என்னைப்போல் !!!

– பனித்துளி சங்கர்

Leave a comment

Filed under Deepavali, Diwali, Life